tamannaah Bhatia - FairPlay [File Image]
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகை தமன்னாவும் இந்த வழக்கில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், மும்பை சைபர் போலீசார் அனுப்பியுள்ள சம்மனில், தமன்னா ஏப்ரல் 29 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
நடிகர் சஞ்சய் தத் இந்தியாவில் இல்லாததால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனால், அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…