நானே வருவேன் படத்தில் முதலில் யாமினி யாக்னாமூர்த்தி எனும் பெண் ஒளிப்பதிவாளரை மாற்றிவிட்டு அரவிந்த் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு.
தனுஷ் நடிப்பில் தற்போது நானே வருவேன் திரைப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த படத்தில் இந்துஜா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு ஜீப்பை மையமாக கொண்டு தேஜாவு எனும் அமானுஷ்ய கதைக்களத்தை கொண்டு தயராகி வருகிறதாம். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
முதலில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னாமூர்த்தி எனும் பெண் ஒளிப்பதிவாளரை செல்வராகவன் பரிந்துரை செய்தாராம். செல்வராகவன் நடித்துள்ள சாணி காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி தான். அப்போது அவரது வேலை பிடித்துப்போகவே நானே வருவேன் படத்திலும் கமிட் செய்ய நினைத்தாராம்.
ஆனால், தனுஷுக்கு என்னவோ சரியாக படவில்லையாம். அதனால் மீண்டும் புதுப்பேட்டை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவை நானே வருவேன் படத்திற்கும் ஒளிப்பதிவாளராக தற்போது ஒப்பந்தம் செய்துள்ளாராம். விரைவில் இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…