இந்த வரும்டம் வெளியான தமிழ் படங்கள் எதுவும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையவில்லை என்றே கூறவேண்டும். படத்திற்காக போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்தாலும் விமர்சன ரீதியாக எந்த படமும் பெரியவெற்றியை பெறவில்லை.
ஆனால் பான் இந்தியா படங்களான ஆர்ஆர்ஆர்,கேஜிஎப் ஆகிய திரைப்படங்கள் இந்த வரும்டம் வெளியாகி தமிழ் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஹனிபிலிக்ஸ் நிறுவனத்தின் சினிமா தொடர்பான மென்பொருள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மணிரத்னம் ” பிறமொழி படங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைக் கண்டு கவலை படத்தேவையில்லை. தமிழ் படங்கள் இந்திய சினிமாவில் வெற்றி அடைந்துள்ளன. தமிழ் சினிமாவில் திறமைக்கு பஞ்சமே கிடையாது புதிய திறமைகள் பிற மொழிகளில் உருவாகி இருப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம், வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…