MKumaran Part-2 [File image]
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. இந்த திரைப்படத்தில் நதியா, அசின் தொட்டும்கல், பிரகாஷ் ராஜ், விவேக், ஜனகராஜ், சுப்பாராஜு, ஓ. எ. கே. சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அம்மா நன்னா ஒ தமிழா அம்மாயி’ என்ற படத்தினுடைய தமிழ் ரிமேக் தான். ரீமேக் என்றாலும் தெலுங்கை விட தமிழில் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு ஹிட் ஆனது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட வசூல் ரீதியாக மட்டும் இந்த திரைப்படம் 54 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளதாம். இந்த இரண்டாவது பாகத்திற்கான கதை எல்லாம் எழுதி முடித்துவிட்டதாகவும், இந்த இரண்டாவது பாகத்தில் நதியாவின் கதாபாத்திரம் இடம்பெறாது எனவும் இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “எம்.குமரன் பார்ட்-2-க்கான ஸ்கிரிப்டை எழுதிவிட்டேன், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், நதியாவின் கதாபாத்திரம் படத்தில் இடம்பெறாது” என தெரிவித்துள்ளார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஹீரோவாக நடிகர் ஜெயம் ரவி தான் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி இரண்டாவது பாகம் உருவாவதை போல மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன தனி ஒருவன் இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி 2 எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…