மம்மூட்டி ஒரு ‘ஈகோ’ பிடிச்ச ஆளு! வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி!

Published by
பால முருகன்

Mammootty : நடிகர் மம்மூட்டி ஈகோ பிடித்த ஆள் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்மூட்டி. 72 வயதான இவர் எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசுவதும் இயல்பாகவும் பழகுவது உண்டு, எனவே, இவரை பிடிக்காத ஆளே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். ஆனால், தற்போது பிரபல இயக்குனரான ஆர்.கே. செல்வமணி பேட்டி ஒன்றில் மம்மூட்டி மிகவும் ஈகோ பிடித்த ஆள் என்று அவரை பற்றி பேசியுள்ளார்.

பேட்டியில் பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி  ” மம்மூட்டி ஒரு சிறந்த நடிகர் இதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் நடிகர் என்பதனை தாண்டி ஒரு நல்ல மனிதர். ஆனால், அவரை போல ஒரு ஈகோ பிடித்த ஆளை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அவருக்கு ஈகோ இருக்கிறது. ஒழுக்கத்தில் விஜயகாந்தை நாம் எப்படி சொல்கிறோமோ அதே போல தான் ஒழுக்கத்தில் மம்மூட்டி என்று சொல்வேன்.

ஒரு முறை ஒரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவேண்டி இருந்தது. ஆனால், சில காரணங்களால் எனக்கும் அவருக்கும் செட் ஆகவில்லை. படத்தின் கதை எல்லாம் சொல்லி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கி அவரை வைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்தது. நான் சொல்லிவிட்டேன் இந்த படத்தில் அவர் வேண்டாம் அட்வான்ஸ் வேண்டுமென்றாலும் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினேன்.

மம்மூட்டியும் என்னால் சற்று கடுப்பாகி இதை மாதிரி ஒரு க்ராக் கூட படமே நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதில் இருந்து சில வருடங்கள் நான் அவருடன் பேசவே இல்லை. பிறகு பல வருடங்கள் கழித்து நான் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்த காலத்தில் அவரை சந்தித்து அவரிடம் ஒரு கதையை சொன்னேன்.

ஆனால் என்னை க்ராக் என்று சொன்ன அந்த மம்மூட்டி எனக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம்” எனவும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.  மேலும் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் மம்மூட்டி மக்கள் ஆட்சி, அரசியல் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

33 minutes ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

1 hour ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

2 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

3 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago