சினிமா

கோடி கோடியா வாங்கிட்டு கெட்ட வார்த்தை பேசுவீங்களா? ‘வாழ்க்கை சரிகிடும் தம்பி’..வறுத்தெடுத்த கே.ராஜன்!

Published by
பால முருகன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆன் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் படங்கள் வெளியானது என்றால் அது சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் லியோ திரைப்படமும் சர்ச்சைகள் ஏற்பட்டு வெளியாகிறது. ஏனென்றால் படத்தில் விஜய் கெட்ட வார்த்தையில் பேசியது தான்.

விஜய் பேசிய கெட்டவார்த்தைகள் மற்றும் படத்தில் வரும் கெட்டவார்த்தைகள் ‘மியூட்’ செய்யப்பட்டு தான் திரையரங்குகளில் வெளியிடபடும். ஆனால், படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியிடப்பட்டது என்பதால் விஜய் பேசிய ஒரு கெட்டவார்த்தை ‘மியூட்’ செய்யவில்லை. எனவே விஜய் கெட்டவார்த்தை பேசியதை வைத்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கே.ராஜன். சமீபத்தில் விஜய் லியோ படத்தில் பேசியுள்ள அந்த கெட்டவார்த்தை பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” கெட்டவார்த்தைகள் பேசுவது என்பது மிகவும் தவறு கேடுகெட்டவனிலும் கேவலமானவர்கள் தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள். நேருக்கு நேர் பேசிக்கலாம் அதுவும் இப்போது குறைந்துவிட்டது. முன்பு தான் அப்படியெல்லாம் பேசுவார்கள்.

இப்போது படிப்பு அதிகமாகி விட்ட காரணத்தால் அப்படி பேசுவது யாரும் இல்லை. ஆனால், சினிமாவில் அப்படி இல்லை பெரிய ஹீரோ அந்த மாதிரி சொல்லும்போது அது மக்களை போய் சேர்ந்தால் எப்படி சரியாக இருக்கும்? எல்லா குடும்பங்களும் படம் பார்க்கிறது. நாம் சொல்லும் வார்த்தையை வேறு யாரவது சொன்னால் சரியாகவா இருக்கும்? அதுவும் அரசியலுக்கு வர போவதாக இளைஞர்கள் நம்பி கொண்டு இருக்கும் ஒரு ஹீரோ இப்படி பேசலாமா? இது மிகவும் தவறு.

படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் அருமையான இயக்குனர் நான் அதில் எல்லாம் குறையே சொல்ல மாட்டேன். அவர் இன்னும் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். ஆனால், இப்படி கேவலமான வார்த்தைகளை படத்தில் வைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக வாழ்க்கை சறுக்கிடும் தம்பி. இது தமிழ்நாடு எனவே, தயவு செய்து அந்த மாதிரி கெட்டவார்த்தைகள் வைக்கவேண்டாம்.

கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு கெட்டவார்த்தை பேசுவீர்களா? அப்படி பேசினால் அது இளைஞர்கள் மனதில் பொய் பதிந்தால் என்ன செய்வது” என மிகவும் காட்டத்துடன் பேசியுள்ளார். மேலும், இந்த வார்த்தை பேசும்போது விஜய் மிகவும் தயங்கி கண்டிப்பாக பேசணுமா?என லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு லோகேஷ் கண்டிப்பாக பேசுங்கள் என்று கூற அதன் காரணமாக தான் விஜய் பேசியுள்ளார். இதற்கான முழு காரணம் தான் மட்டும் தான் எனவும் லோகேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

48 minutes ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

60 minutes ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

2 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

3 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

3 hours ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

3 hours ago