சினிமா

அட்லீயை பார்த்து அசந்து போன விஜய்! நண்பன் படப்பிடிப்பில் நடந்த இன்ப அதிர்ச்சி?

Published by
பால முருகன்

இயக்குனர் அட்லீ பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய மூன்று படங்களுமே விஜய்க்கு சரி அட்லீக்கும் சரி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்றே சொல்லவேண்டும்.

இதில் அவர் முதலில் ராஜா ராணி படத்தை இயக்கி முடித்த பின் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இது தான் அவர் விஜய்யை வைத்து இயக்கிய முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தின் கதையை கூறுவதற்கு முன்பே அதாவது 2012-ஆம் ஆண்டே விஜய் அட்லீயிடம் தனக்கு கதை ரெடி செய்ய சொல்லி கேட்டுவிட்டாராம்.

2000 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்ட அட்லீ! டாப் ஹீரோக்களை வைத்து பிரமாண்ட ஹாலிவுட் படம்?

அந்த சமயம் அட்லீ இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு விஜய்யுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பன் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அன்று அட்லீயை விஜய் கேரவனுக்கு அழைத்தாராம். கேரவனுக்கு வந்தவுடன் அவருக்கு ஒரு நாற்காலியை போட சொல்லி அட்லீயை அமர சொன்னாராம்.

பிறகு அமர்ந்தவுடன் அட்லீயை பாராட்டினாராம். பாராட்டி விட்டு இந்த படத்தில் நீங்கள் உங்களுடைய கேப்டன் சொன்னதை கேட்டு நன்றாக வேலை செய்து உள்ளீர்கள். உங்களுடைய வேலை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது எனக்காக ஒரு கதை தயார் செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் நாம் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்று கூறினாராம்.

நடிக்க மறுத்த விஜய்! கடுப்பாகி ஆண்டவர் பக்கம் தாவிய அட்லீ?

உதவி இயக்குனராக இருந்த அந்த சமயத்தில் அட்லீக்கு இது மிகவும் இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாம். அட்லீயை பார்த்து தனக்கு ஒரு கதையை தயார் செய்யுங்கள் என்றார் கூறிய முதல் நடிகரும் விஜய் தானாம். விஜய் தனக்கு ஒரு கதை தயார் செய்ய கூறியவுடன் அட்லீ மிகவும் உற்சாகம் அடைந்து அன்றிலிருந்து விஜயின் ரசிகராக மாறிவிட்டாராம். இந்த தகவலை அட்லீயே சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ தெரிவித்துள்ளார்.

விஜய் கூறிய பிறகு அட்லீ ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்தாக விஜய்யை சந்தித்து தெறி படத்தின் கதையை கூறி அவரை வைத்து படம் இயக்கினார். படமும் வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அட்லீக்கு விஜய்யை வைத்து மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago