Mannarachopra [file image]
நடிகையும், பிரியங்கா சோப்ராவின் உறவினருமான மன்னாரா சோப்ரா ஜித் திரைப்படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமானவர். ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதிக்க முடியாவிட்டாலும், அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் அப்டியே திரும்பினார். தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்த இவர் தற்போது அங்கு முன்னணி நடிகையாக சிறந்து விளகுகிறார்.
அந்த வகையில், அவர் விரைவில் ஒரு தெலுங்கு படத்தில் டோலிவுட் நடிகர் ராஜ் தருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘தீர்கபாதர சாமி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது, அதில் நடந்த மோசமான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
வீடியோவில் ” நடிகை மன்னாரா சோப்ரா தனது இயக்குனருடன் மீடியா கேமரா முன் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது, திடீரென்று இயக்குனர் எஸ் ரவிசங்கர் சவுத்ரி மனாரா கன்னத்தில் முத்தமிட்டார். இயக்குனர் செய்த இந்த செயலை கண்டு மனராவும் சற்று அதிர்ச்சியாகினார்.
பிறகு நிறைய கேமராக்கள் சுற்றி இருந்ததால் அப்டியே சிரித்துகொண்டே அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார். இருப்பினும் திடிரென இயக்குனர் முத்தம் கொடுத்ததால் நடிகை மன்னாரா சோப்ரா முகத்தில் சற்று கோபம் வந்தது தெரிந்தது. பிறகு அப்படியே கோபத்தை மறைத்து வைத்துவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.
இது தொடர்பான அந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மற்றும் சமூக ஊடகங்களில் இயக்குனரின் இந்த செயலுக்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பலரும் பொது இடத்தில் நடிகையிடம் இப்படி செய்தது மிகவும் தவறான செயல் என கூறி வருகிறார்கள்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…