Karthi [File image]
சென்னை : சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிழந்தார் என கூறப்படுகிறது. 20அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடல் திருவொற்றியூரில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், சர்தார்-2 ஹீரோ நடிகர் கார்த்தி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நேரில் சென்று நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். கதறி அழுதபடி கண்கலங்கி நின்று கொண்டு இருந்த நடிகர் கார்த்தி அவருடைய குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்துவிட்டு சென்றார்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…