ஆயிரத்தில் ஒருவன்-2விற்கு நான் தான் மியூசிக்.! துண்டு போட்டு சீட் பிடித்த ஜீவி.!

Published by
பால முருகன்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படம் வெளியான ஆண்டில் மக்களிடம் சரியாக சேரவில்லை என்றே கூறலாம். அடுத்தாக ரீ ரிலீஸ் செய்தவுடன் அனைவரும் வியந்து செல்வராகவன் மற்றும் படக்குழுவை பாராட்டினார்கள் என்றே கூறலாம்.

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 2024-ஆம் ஆண்டு தொடங்கும் எனவும் அதில் நடிகர் தனுஷ் நடிப்பார் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் 2 விற்கு இசையமைப்பாளர் நீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து அவர் கூறியது ” ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு என்னை அழைத்தாள் கண்டிப்பாக இசையமைப்பேன்…என்னை கூப்டற மாதிரி தான் சொல்லுறாங்கள்..அந்த படம் தொடங்கி..தயாரிப்பாளர் சரியாக அமைந்து படத்தை கையெழுத்துசெய்வது வரை நான் கிடையாது..கண்டிப்பாக நான் படத்தில் இருக்க 90% வாய்ப்பு இருக்கு” என தெரிவித்துள்ளார்.

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

31 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

3 hours ago