AishwaryaRai AaradhyaBachchan [file image]
ரசிகர்களால் அன்புடன் இன்னும் உலக அழகி என்று அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளை கடந்து இன்னும் சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நந்தினி காதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், தனது மகள் ஆராத்யாவுடன் வெளி நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ்க்கு செல்லும்போது ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அவரை சூழ்ந்தனர்.
அப்போது ஊடகங்கள் மேடம் போட்டோ என கேட்க ஐஸ்வர்யா ராயும் தனது மகள் ஆராத்யாவுடன் போஸ் கொடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மகள் அவரை போலவே அழகாக இருக்கிறார்.
சிறிய வயதில் ஆராத்யாவை பார்த்த பலரும் இப்போது பார்த்துள்ளதால் பலரும் இது ஐஸ்வர்யா ராயின் மகளா? நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறிவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆராத்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முத்தம் கொடுத்தபடி, ஐஸ்வர்யா ராய் சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தில் கூட ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா சிறிய பெண் போல தான் இருந்தார். ஆனால் , தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தை பார்க்கையில் ஆளே மாறி பெரிய பெண் போல் இருக்கிறார்.மேலும், நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…