நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்களும் அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து, இவரது ரசிகர்கள் நேற்று பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், இரத்ததான முகாம் நடத்தியுள்ளனர்.
இந்த முகாமினை தனுஷின் பெற்றோர்களான கஸ்தூரி ராஜா மற்றும் தாணு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துள்ளனர். இந்த இரத்ததான முகாமில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி மாவட்ட தனுஷ் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், ‘ கண்ணா எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், உங்க அன்பு மட்டும் போதும். அன்பு மட்டும் கொடுங்க என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், எந்த நடிகர்களை பற்றியும் நாம் பேச வேண்டாம். அப்படியே யாராவது என்னை குறித்து உங்களிடம் தவறாக பேசினால் நன்றி என்று கூறிவிட்டு கடந்து போங்கள். அன்பு மட்டுமே நிரந்தரம் என்றும், விரைவில் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…