சினிமா

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன்! அடம் பிடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ‘விக்ரம் வேதா,’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தெலுங்கில் ‘ஜெர்சி’, மலையாளத்தில் ‘ஆராட்டு’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் கடைசியாக இறுகப்பற்று  படத்தில் நடித்திருந்தார்.

படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வரும் நிலையில். அடுத்ததாக பல படங்களில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் கமிட் ஆகி வருகிறார்.  இதற்கிடையில், பேட்டி ஒன்றில் பேசிய அவர் தான் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என  மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” சில நடிகைகள் பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் சிறிய நடிகர்களின் படங்களில் காதல் காட்சி இருந்தாலும் அதில் தயங்கமால் நடித்து விடுகிறார்கள். ஆனால், எனக்கு ஹீரோவுடன் ரோமன்ஸ் செய்யும் படங்கள் எல்லாம் செட் ஆகாது என்ற காரணத்தால் அந்த மாதிரி கதாபாத்திரம் கொண்ட படங்கள் வந்தாலும் அதில் இருந்து விலகியே நிற்கிறேன். பல முறை அந்த மாதிரி கதாபாத்திரம் கொண்ட படங்களும் எனக்கு வந்திருக்கிறது.

நான் நடிக்கவில்லை என மறுக்கவும் செய்துஇருக்கிறேன். படத்தின் கதைக்கு ஏற்றது போல ஒரு நல்ல கதாபாத்திரம் கொண்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க மட்டுமே எனக்கு ஆசை. இதுவரை என்னுடைய கதாபாத்திரம் தெரியும் நல்ல படங்களை மட்டுமே நான் தேர்வு செய்து நடித்திருப்பதாக உணர்கிறேன். இனிமேலும் அந்த மாதிரி எனக்கு பிடித்து என்னுடைய கதாபாத்திரம் தெரியும் அளவிற்கு கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன்.

மற்றபடி, ஒரு படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ஓப்புக்கொண்டு அவருடன் காதல் காட்சிகளில் நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன்” என தெரிவித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்ததாக தமிழில் “கலியுகம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் ஹிந்தியில் “திரு கண்ணாவிற்கு கடிதங்கள்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

28 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

52 minutes ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

9 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

11 hours ago