என்னைக்குமே உங்களை ஏமாத்த மாட்டேன்! புது நிகழ்ச்சி ஆரம்பித்த வெங்டேஷ் பட் நெகிழ்ச்சி!

Published by
பால முருகன்

Venkatesh Bhat : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இவர் இதுவரை நடந்த 4 குக் வித் கோமாளி  சீசன்களிலும் நடுவராக இருந்து வந்த நிலையில், 5-வது சீசனில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்து இருந்தார். என்ன காரணத்துக்காக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறித்து அவர் கூறவில்லை.

திடீரென அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் என்று வீடியோ வெளியீட்டு அறிவித்து இருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து, நேற்று குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இன்று காலை வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வெங்கடேஷ் பட் பேசியதாவது ” நீங்கள் எல்லோரும் என்னை மிஸ் செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. நீங்கள் அனுப்பிய மெசேஜ் அனைத்தையும் நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இதனை எல்லாம் பார்க்கும்போது நான் ரொம்பவே குடுத்து வைத்தவன் என்று நினைக்கிறேன். என்னைக்குமே நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என்னைக்கும் உங்களை நான் விட்டு கொடுக்கமாட்டேன்.

உங்களுக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது. இன்றிலிருந்து காலை 8 மணிக்கு சன் தொலைக்காட்சி பாருங்கள் அது உங்களுக்கு தெரியும். என் மீது நீங்கள் காட்டும் அன்பிற்கு ரொம்பவே நன்றி” என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் திரும்ப நீங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்பது போல கூறிக்கொண்டு  வருகிறார்கள்.

மேலும், சன் தொலைக்காட்சியை பாருங்கள் என கூறிய வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சி தான். கடந்த 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு அங்கமாக இருந்த பிரபல நிறுவனமான மீடியா மேசன்ஸ் நிறுவனமும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து ஒரு புது சமையல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். விரைவில் இந்த நிகழ்ச்சிக்கான விவரமான தகவல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

2 minutes ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

28 minutes ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

48 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

1 hour ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

2 hours ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

3 hours ago