சினிமா

வாய்ப்பு கேட்டு தோளை தட்டிய நடிகர்! கடுப்பாகி கேவலமா திட்டி வெளியே அனுப்பிய இளையராஜா!

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களுக்கும் அவருடைய பின்னணி இசைக்கும் மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் என்ற சாதனையை வைத்துக்கொண்டு இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அன்று அவருடைய இசை எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

இளையராஜா இசையையும் தாண்டி நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபம் கொண்ட ஒரு மனிதர். ஆனால், தேவையில்லாத விஷயத்திற்கு அவர் அவ்வளவு கோபப்பட்டது இல்லை இசையமைத்துக்கொண்டிருக்கும்போது யாராவது எதாவது செய்து அவரை இசையமைக்கவிடாமல் இருந்தால் மிகவும் கோபப்பட்டுவிடுவார். இதனை அவருடன் பணியாற்றிய பலரும் கூறி நாம் பார்த்திருப்போம் .

அப்படி தான் நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு முறை இளையராஜாவிடம் கேவலமாக திட்டு வாங்கினாராம். லிவிங்ஸ்டன் நடிக்க வருவதற்கு முன்பு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தாராம். இளையராஜா அந்த சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் தான் இசையமைத்து கொண்டு இருப்பார். எனவே உள்ளே வர அனுமதி கூட கேட்காமல் வேகமாக லிவிங்ஸ்டன் உள்ளே சென்று விட்டாராம்.

இளையராஜா வீட்டு வாசலில் உட்கார்ந்த பாண்டியராஜன்! ஆண்பாவம் படம் உருவான கதை!

அந்த சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையும் நடந்து வந்ததாம் அப்போது இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைத்துக் கொண்டு இருக்க பின்புறம் இருந்து லிவிங்ஸ்டன் இளையராஜாவின் தோளை தட்டி எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா ? என்று வாய்ப்பு கேட்டாராம். உடனடியாக இசை அமைத்துக் கொண்டிருந்த இளையராஜா மிகவும் கடுப்பாகி நீ யார் முதலில் உன்னை யார் உள்ளே விட்டார் என கத்தி பேச தொடங்கி விட்டாராம்.

பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவின் ஊழியர்களிடம் இவரை யார் உள்ளே விட்டது அறிவில்லையா? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்ன  சும்மாவா உட்கார்ந்து இருக்கிறேன் உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது?  என்பது போல லிவிங்ஸ்டனிடம் மிகவும் கோபத்துடன் இளையராஜா கத்தினாராம். அது மட்டும் இன்றி கேவலமாக திட்டி உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேவும் போக சொல்லிவிட்டாராம்.

கமல் சாரோட நட்பை நானே கெடுத்துட்டேன்! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் லிவிங்ஸ்டன்!

இப்படி கேவலமாக திட்டியவுடம் நடிகர் லிவிங்ஸ்டன் மிகவும் வேதனை அடைந்துவிட்டாராம். பிறகு தனக்குள்ளே வாய்ப்பு கேட்க வந்ததற்கு எதற்காக இப்படி திட்டுகிறார்கள் என யோசித்தாராம். இந்த தகவலை லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு பின் நடிகரான லிவிங்ஸ்டன் இளையராஜா இசையில் சொல்லாமலே, சேட்டை, என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

46 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

51 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago