vishnu vishal [file image]
Indru Netru Naalai 2 : இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும், அதில் விஸ்ணு விஷால் நடிக்கவில்லை எனவும் தகவல்.
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இன்று நேற்று நாளை. மியா ஜார்ஜ், கருணாகரன், வி. ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார், பி.ரவிசங்கர், டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அருமையான ஒரு படத்தை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் மக்களுக்காக கொடுத்து இருந்தார்.
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளாராம். கடைசியாக இவர் அயலான் படத்தை இயக்கி அதில் நடித்து இருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இன்று நேற்று நாளை 2 படத்தை இயக்க ரெடியாகி வருகிறார்.
ஆனால், இந்த இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் நடிக்கவில்லையாம். கதையைக்கேட்டுவிட்டு நான் வரல என்ன விடுங்க என்று விலகி விட்டாராம். எனவே, படக்குழு அந்த கதாபாத்திரத்திற்கு எந்த ஹீரோ சரியாக இருப்பார் என யோசித்து வருகிறதாம். கண்டிப்பாக முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் எவ்வளவு பொருத்தமாக இருந்தாரோ அதைப்போல தான் ஹீரோவை நடிக்க வைக்க முயற்சி செய்வார்கள். விரைவில் யார் நடிப்பார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…