சினிமா

பொண்ணுங்கள அறையும் குறையுமா ஆட விடுவது தான் ‘பிக் பாஸ்’ ? வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கூல் சுரேஸ்!

Published by
பால முருகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மற்ற படங்கள் வெளியாகும் போது அதனை பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என்ற வசனத்தை பேசினார். இவர் பேசியதை ஊடகங்கள் யூடியூபில் வெளியிட இவரை பலரும் தங்களுடைய ப்ரோமோஷனுக்காக அழைத்து கொண்டார்கள்.

கூல் சுரேஷ் பேசுவது சிலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு சிலருக்கு எரிச்சலையும் உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சரக்கு எனும் திரைப்படத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளினிக்கு மாலை போட்டார்.

இப்படி பொது மேடையில் கூல் சுரேஷ் செய்தது பெரிய அளவில் பேசும் பொருள் ஆகி பலரும் இப்படி அவர் செய்தது தவறு என கூறினார்கள். பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீட்டு தனக்கு எதாவது வாய்ப்பு கொடுங்கள் எனவும் கூறியிருந்தார். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த மேடை மிகப்பெரிய மேடை இந்த நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என சற்று கண்கலங்கி கூல் சுரேஷ் பேசியிருந்தார். ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்கு முன்பு பிக் பாஸ் குறித்து கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது ” பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் என்னது ? சிறிய சிறிய பெண்களை அரைகுறை ஆடையில் ஆட வைப்பது தான். காலையில் எழுந்தவுடன் பாட்டு போட்டால் ஜிங் ஜிங் என்று ஆடுவார்கள்” என பேசி இருந்தார். அந்த வீடியோவையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் நடனம் ஆடிய வீடியோவையும் வெளியீட்டு கலாய்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

25 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago