Categories: சினிமா

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது இவரா? சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!

Published by
பால முருகன்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்து அசத்தி இருப்பார் என்றே சொல்லவேண்டும்.

அந்த கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகையாவது நடித்திருந்தாலும் கூட இவருடைய அளவிற்கு நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு படத்தில் சந்திரமுகியாகவே நடிகை ஜோதிகா வாழ்ந்து இருப்பார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டது நடிகை ஜோதிகாவே இல்லயாம். முதல் முறையாக நடிகை சிம்ரன் தான் தேர்வு செய்யப்பட்டாராம்.

முதலில் ரஜினிகாந்திடம் படத்தின் கதையை கூறிவிட்டு சந்திரமுகியாக யாரை நடிக்க வைக்கலாம் என பேசினார்களாம். அந்த சமயம் சிம்ரன் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நிலையில், அவரை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால், அந்த சமயம் சிம்ரன் திருமணம் செய்துகொன்டு கர்ப்பமாக இருந்தாராம்.

சந்திரமுகி படத்தில் தாவி தாவி நடனம் ஆடி நடிப்பது போல காட்சிகள் இருந்ததால் தன்னால் நடிக்கவே முடியாது என கூறினாராம். படத்தில் பல பிரபலங்கள் மற்றும் படத்தின் கதையும் அருமையாக இருந்ததால் கதையை கேட்டுவிட்டு அருமையாக இருக்கிறது படத்தில் நடிக்க ஆசையாகவும் இருக்கிறது என்னால் முடியவில்லையே என வருத்தத்துடன் தான் நடிக்க சிம்ரன் மறுத்தாராம்.

பிறகு இயக்குனர் பி,வாசு இந்த கதையை எழுதும்போதே சௌந்தர்யா தான் சந்திரமுகியாக நடிக்கவேண்டும் என்று யோசனை வைத்திருந்தாராம். ஆனால், 2004-ஆம் ஆண்டு விமான விபத்தில் சௌந்தர்யா உயிரிழந்தார். அவர் உயிரியுடன் இருந்திருந்தால் அவர் தான் சந்திரமுகி படத்தில் நடித்திருப்பார் எனவும் இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திரமுகி திரைப்படத்தின் முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோரை  வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த  செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

55 minutes ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

1 hour ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

2 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

3 hours ago