Categories: சினிமா

Jawan: கட்டிபுடிடா…பாலிவுட்டை அலறவிட்ட அனிருத்-அட்லீ.! ஆழ்வார்பேட்டை டூ அந்தேரி..,

Published by
கெளதம்

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், நடிகை நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு, சுனில் குரோவர், சிமர்ஜீத் சிங் நாக்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், இந்த படத்தை பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் இயக்குனர் அட்லீ, அவரது மனைவி மற்றும்  இசையமைப்பாளர் அனிருத் ஒன்றாக சென்று கண்டு மகிழ்ந்தனர்.

அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஆக்ஷன், மாஸ், மிரட்டல் என அனைத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லீ பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படத்தில் அட்லீயின் வழக்கமான ஸ்டைலில் அனைத்து எமோஷன்களையும் கலந்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது.

மேலும், அனிருத்தின் இசையும் பெருமளவில் பாராட்டை பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் என்றே சொல்லலாம். சொல்ல போனால், பாலிவுட்டையை மிரள வைத்துளர்கள் என்றே கூறலாம்.

Anirudh – atlee [Image -@anirudhofficial]

தற்பொழுது, படத்தை பார்த்துவிட்டு அனிருத்-அட்லீ ஆகிய இருவரும் பூரிப்படைந்து கட்டிபுடிக்கும் புகைப்படம் ஒன்றை அனிருத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஆழ்வார்பேட்டையில் இருந்து அந்தேரி வரை என்று குறிப்பிட்டு இந்த படம் மற்றும் இசை மீதான உங்கள் அன்புக்கு நன்றி, கிங் ஷாருக்கானுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

25 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

29 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

40 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago