jawan [FILE IMAGE]
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையிலும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை என்று கூறலாம்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த திரைப்படம் அந்த அளவிற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடைசியாக ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் அவருக்கு 1000 கோடி வசூல் கொடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து ஜவான் திரைப்படமும் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளதால் பாலிவுட் திரையுலகமே ஷாருக்கான் கொண்டாடி வருகிறத.
அதைப் போல ஜவான் படத்தின் இயக்குனர் அட்லீ கடைசியாக விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜவான் படத்தை அவர் இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அவருக்கும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ பெரிய இயக்குனர்கள் இருந்தும் அவர்கள் பாலிவுட்டிற்கு சென்று ஒரு படம் எடுத்து அந்த படம் 1000 கோடி வசூல் செய்ததே இல்லை. ஜவான் திரைப்படம் தான் முதல் முறை. எனவே தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் செய்த படம் எடுத்த இயக்குனர் என்ற சாதனையை இயக்குனர் அட்லீ தற்போது படைத்துள்ளார்.
மேலும், ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தமிழ் சினிமாவில் இருந்து அவருக்கு பெரிய வாய்ப்பு வந்ததாகா அட்லீயே தெரிவித்து இருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…