கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்.! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..

Published by
கெளதம்

சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிக்கவிருக்கும் 31வது படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவித்துள்ளது.

NTR Neel [Image – @MythriOfficial]
கேஜிஎஃப் மற்றும் சாலார் போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தேவாரா’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில், ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆரின் அடுத்த பட அப்டேட் வெளியாகி டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. படம் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், ஜூனியர் என்டிஆர் தனது வரவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘தேவாரா பாகம் 1’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தில் சைஃப் அலிகான், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் கடலோர நிலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

24 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago