அடடே…புதிய தொழில் தொடங்கிய நம்ம காஜல் அகர்வால்…குவியும் வாழ்த்துக்கள்.!!

Published by
பால முருகன்

பிரபல நடிகையான காஜல் அகர்வால் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் ‘காஜல் பை காஜல்’ (Kajal by Kajal ) என்ற அழகு சாதனப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.

Actress Kajal Aggarwal [Image source : twitter/ @HackerCine]

இந்த  கடை திறப்பு விழாவிற்கு காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் கிச்சாலுவை சிறப்பு விருந்தினராக அழைத்தார்.காஜலின் புதிய தொழில் திறப்பு விழாவிற்கு வந்த கெளதம் கிச்சாலு கடையை திறந்து வைத்தார். அதன் பிறகு தன் அன்பு மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து நெகிழ வைத்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், புதியதாக காஜல் அகர்வால் தொழில் தொடங்கியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

kajalkitchulu [Image source : twitter/ @RMediaOff]

மேலும், நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 இல் கௌதம் கிச்சாலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு ” நீல் கிச்சலு” என்று பெயரிட்டு சமீபத்தில் தனது மகனின் முதல் பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago