Categories: சினிமா

கேப்டன் கிட்ட இருந்து அந்த விஷயத்தை கற்றுக்கொள்ளலாம் – கமல்ஹாசன்!

Published by
பால முருகன்

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நேற்று ஜனவரி ( 19) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த இரங்கல் கூட்டத்திற்கு விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் , கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது ” விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் நானும் அவரும் ஒருமுறை சந்தித்து பேசினோம். அந்த சமயம் அவர் என்னிடம் எப்படி பாசத்தோடு பழகினாரோ அதே போல தான் பெரிய நடிகராக வளர்ந்த பிறகும் பழகினார். அவருடைய எண்ணமே ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் தான் பட்ட அவமானங்கள் வேறு யாருக்கும் வந்துவிட கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்.

கேப்டனை நினைத்து வடிவேலு அழுதிருப்பார்! சரத்குமார் பேச்சு!

விஜயகாந்த் அவருடைய குரல் மற்றவர்களுக்காக போராடும் குரல். சினிமா துறையில் இருக்கும்போது நடிகர்களுக்காக குரல் கொடுத்தார். அதைப்போல அரசியலில் அவர் வருகை தந்த பின் பெரிய தலைவர்களுக்கெல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். தனிப்பட்ட முறையை அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அதில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், அவருடைய கோபத்தை தான் நான் சொல்வேன். அவருடைய கோபம் நியாயமான கோபமாக இருக்கும். அவருடைய நியாமான அந்த கோபங்கள் நடிகர் சங்கத்துக்கும் உதவி செய்து இருப்பதாக நான் நினைக்கிறேன். கேப்டன் விஜயகாந்திற்கு ஒரு தைரியம் உண்டு. அது என்னவென்றால், தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் தான். அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

அதில் முக்கியமாக நான் மேலே குறிப்பிட்டு சொன்னது போல அந்த மாதிரியான குணாதியசங்களை பின்பற்றலாம். அவர் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்” எனவும் சற்று கண்கலங்கியவாறு கமல்ஹாசன் விஜயகாந்த் பற்றி பேசினார்.

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

11 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

11 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

12 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

13 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

13 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

13 hours ago