கமலின் பட நிறுவனத்திற்கு விக்ரம் – விஜய் சேதுபதி இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார் எனவும், அந்த படத்தை மாலிக் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார் எனவும், இந்த படத்திற்கான திரைக்கதையை கமலே எழுதுகிறார் எனவும் கூறப்படுகிறது.
தற்போது இளம் நடிகர்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்கி பல சம்பவங்களை செய்ய தயாராகி கொண்டிருக்கிறார் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அடுத்தாக விக்ரம் திரைப்படம் படு வேகமாக தயாராகி வருகிறது.
விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். அடுத்த வருட கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கடுத்து, மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலை வைத்து மாலிக் சென்சேஷனல் ஹிட் கொடுத்த இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.
அந்த மாலிக் படத்தின் கதையோட்டம் அப்படியே கமலின் நாயகன் போல அமைந்திருக்கும். அதுவும் படத்தின் மேக்கிங்கும், ஃபகத்தின் நடிப்பும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கும். அவரது இயக்கத்தில் கமல் நடிக்கிறார் என்றதுமே ரசிகர்கள் படம் எப்படி வர போகிறதோ என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தற்போது வெளியான தகவலின் படி, கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விக்ரம் – விஜய் சேதுபதி இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளனர். அந்த படம் தான் இந்த மகேஷ் நாராயணன் திரைப்படம் எனவும், இதில் கதை திரைக்கதையை கமலே எழுதுகிறார் எனவும், கமல் சின்ன கௌரவ தோற்றத்தில் மட்டும் நடிக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…