புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? இசையமைப்பாளராக கலக்கிய கதீஜா ரஹ்மான்!

Published by
பால முருகன்

சென்னை : இசை புயல் அதாவது அவருடைய ரசிகர்கள் அன்போடு அவரை அழைக்கும் ‘பெரிய பாய்’ ஏ.ஆர். ரஹ்மான் 32 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து கொண்டு வருகிறார். காலங்கள் கடந்து எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் கூட இன்றும் இளைஞர்கள் அவருடைய பாடலை முணுமுணுத்து கொண்டு வருகிறார்கள். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ராயன் படத்தில் அவர் பாடிய ‘உசுரே நீதானே’ அந்த வரி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்க மற்றோரு பக்கம் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அவருடைய மகள் கதீஜா ரஹ்மான் மற்றோரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கிறார். கதீஜா ரஹ்மான் தற்போது இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மின்மினி’ படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

தந்தை ஏ.ஆர்.ரஹ்மானின் உசுரே காய்ச்சல் பெரிய அளவில் பரவியது போல, அவருடைய சிங்க பெண்  கதீஜா ரஹ்மான் ‘மின்மினி’ படத்திற்கு இசையமைத்துள்ளது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மின்மினி படம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் பிரீமியர் ஷோ பார்த்த அனைவரும் படத்தினை பற்றி பாராட்டி வருகிறார்கள்.

படம் பற்றி பாராட்டுவது ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம் கதீஜா ரஹ்மான் பின்னணி இசை மிகவும் நன்றாக இருப்பதாகவும், இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் சிறப்பான பின்னணி இசை கொடுத்த இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர் என புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

இந்த படத்துக்கு முன்னாடி கதீஜா ரஹ்மான் வேறு படத்துக்கு இசையமைத்து இருக்கிறாரா? என்ற கேள்வி பலருடைய மனதில் இருக்கும். அதற்கு விடை என்றால் இந்த மின்மினி படம் தான் அவருக்கு முதல் படம். இந்த படத்துக்கு முன்னாடி அவர் சில ஆல்பம் பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த நிலையில், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும்…

13 minutes ago

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

26 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

13 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

14 hours ago