laila [FILE IMAGE]
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுக்க கூடியவர் நடிகை லைலா என்று கூறலாம். இவருடைய நடிப்புக்கு உதாரணமாக விளங்கும் படங்கள் நந்தா, பிதாமகன் என்று கூட சொல்லலாம். இந்த இரண்டு படங்களிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். இவர் நடிக்கும் படங்களை பார்க்கையில் கண்டிப்பாக லைலா அமைதியான ஒரு நடிகை என்று தான் பலருக்கும் தெரியும்.
ஆனால், லைலா மிகவும் கோபம் கொண்ட ஒரு நடிகையாம். குறிப்பாக ஒரு படத்தில் தயாரிப்பாளர் தன்னை வந்து சந்திக்கவில்லை என்ற காரணத்துக்காகவே மிகவும் கோபமடைந்தாராம். அந்த திரைப்படம் வேறு எந்த படமும் இல்லை இயக்குனர் சபாபதி தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் பிரபுதேவா, அப்பாஸ்,சிம்ரன், ரம்பா, ஆகியோர் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளிவந்த வி.ஐ.பி திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை லைலா தான் நடிக்கவிருந்தாராம். லைலாவிடம் படக்குழு பேசி அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு படத்தின் பூஜைக்கும் லைலா வந்துவிட்டாராம். பிறகு படத்தின் சம்பளத்தை மொத்தமாக எழுதி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எழுதி லைலாவிடம் கொடுக்க தன்னுடைய உதவியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரும் லைலாவிடம் அந்த சேக்கை கொடுத்துள்ளார்.
அதற்கு நடிகை லைலா படத்தின் தயாரிப்பாளர் என்னை எதற்கு பார்க்கவில்லை? என்ன தயாரிப்பு நிறுவனம் இது? என்னை வந்து பார்க்கவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என கோபத்துடன் கேட்டாராம். பிறகு ஆரம்பத்திலே இவ்வளவு தகராறு பண்ணுது படத்தில் போட்டால் எப்படி சரியாக இருக்கும் என கலைப்புலி தாணு யோசித்தாராம்.
பிறகு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இயக்குனரை அழைத்து லைலா இந்த படத்திற்கு சரியாக வரமாட்டார் நாம் வேறு நடிகையை போட்டு கொள்ளலாம் என கூறிவிட்டாராம். பிறகு தான் தயாரிப்பாளர் சிம்ரனை இந்த திரைப்படத்தில் நடிக்க கமிட் செய்தாராம். இந்த தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பல பெரிய பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த லைலாவுக்கு நடுவில் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பின் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சர்தார் அடுத்ததாக வதந்தி எனும் வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…