Categories: சினிமா

LCU-வுக்கு 4வது பிறந்தநாள் இன்று.! இயக்குனர் லோகேஷின் முரட்டு சம்பவம் ‘கைதி’ வெளியான நாள்..!

Published by
மணிகண்டன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாகிறது என்றாலே அது LCU எனப்படும் லோகேஷ் சினிமா உலகத்தில் (Lokesh Cinematic Universe) வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது தளபதி விஜய் படமாக இருந்தாலும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இருந்தாலும் சரி இந்த கேள்வியை கடக்காமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜால் படம் இயக்க முடியாது.

இந்த LCUவிற்கு துவக்க புள்ளி வைத்து இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளாது. ஆம், லோகேஷ் முதன் முதலாக உருவாக்கிய அவரது சினிமா உலகின் முதல் படமான கைதி வெளியான நாள் இன்று. அதுவும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிரமாண்ட பிகில் படத்துடன் தைரியமாக எனது படமும் பந்தயம் அடிக்கும் என நம்பி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் கார்த்தி களமிறங்கிய நாள்.

லியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குனர் லோகேஷூக்கு காயம்! 

அந்த நம்பிக்கைக்கு பலனாக, பிகில் மாஸ் ஹிட்டானாலும் கூட, கைதி தமிழசினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் உண்மையில் பிகில் படத்தை விட  அதிகம். மாநகரம் எனும் சிறு பட்ஜெட் , ஆரம்ப கால ஹீரோக்கள் வைத்து சூப்பர் ஹிட் ரக படத்தை இயக்கிய லோகேஷுக்கு கிடைத்த அடுத்த திரைப்படம் கைதி.

அதிலும் தனக்கேற்ற கதாபாத்திரத்தை கட்சிதமாக தேர்வு செய்து பிசிறு தட்டாமல் நடித்து கொடுக்கும் கார்த்தியை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. கார்த்தியை வைத்து புது புது முயற்சிகள் மேற்கொண்டார் இயக்குனர் லோகேஷ். முழுப்படமும் இரவு நேர ஷூட்டிங். கதாநாயகி இல்லை. பாடல்கள் இல்லை. ஆயுள் தண்டனை கைதி மொத்த போலிசாரை காப்பாற்றி, பெரிய போதை மருந்து கும்பலை பிடித்து கொடுக்கும் ஒரே இரவில் நடக்கும் கதை என இயக்கி வெற்றி கண்டார்.

இந்த படத்தின் இறுதி காட்சியில் வில்லன் குரூப் ” சம்பந்தமே இல்லாமல் , வந்து மொத்ததையும் காலி செஞ்சிட்டு போய்ட்டான். யாருன்னே இவன்” என கேட்கும். அதற்கு வில்லன் ” இருக்கு. அவன் பேரு டில்லி.” என கூறுவார். அப்போது படம் பார்ப்பவர்களுக்கு தொற்றிக்கொண்ட சுவாரஸ்யம். 4 வருடங்கள் கடந்தும், இன்னும் நீள்கிறது என்றால், கைதியின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்குனர் லோகேஷ் விக்ரம் படம் இயக்கி முடித்து ரிலீசுக்கு முன்னர் ஒரு இன்ப அதிர்ச்சி செய்தியை வெளியிடுகிறார். கைதி படம் பார்த்துவிட்டு விக்ரம் படம் பார்க்க வாருங்கள் என கூறுகிறார். அப்போது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருக்க, அடுத்து இன்ப அதிர்ச்சியாய், இந்த LCUவில் அதிபயங்கர வில்லனான ரோலக்ஸ்-ஐ களமிறங்கினார்.

இப்படி இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து விட்டு தளபதி விஜயை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்தார். அதிலும் கைதி ரெபரென்ஸ், இறுதியில் விக்ரம் ரெபரென்ஸ் இருக்கும். ஆனால் விக்ரம் ஏற்படுத்திய LCU தாக்கம் அளவுக்கு இல்லை.

அதனால் கைதி இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க தயாராகிவிட்டார். ஆனால் இது LCU இல்லை. தனி படம் என முதலிலேயே அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

கைதி 2 வை பார்க்க இன்னும் 2 வருடங்கள் காத்து கிடைக்க வேண்டுமே என ரசிகர்கள் அதனையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த LCUகளுக்கெல்லாம் ஆரம்ப புள்ளியாய் அமைந்த திரைப்படமான கைதி வெளியாகி இன்றோடு 4 வருடங்கள் ஆகிறது. இதனை ஒட்டி 4YearsOfKaithi என எக்ஸ் சமூக வலை தளத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறனர் LCU ரசிகர்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

20 minutes ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 hour ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

3 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

4 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

4 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

4 hours ago