Categories: சினிமா

தலைவர் 170 படம் இப்படி தான் இருக்கும்! மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்!

Published by
பால முருகன்

ஜெயிலர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அவருடைய 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில் பஹத் பாசில்,  ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங்,  துஷாரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்போகிறது படம் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட திரைப்படம் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த நிலையில், ‘தலைவர் 170’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று செல்லும் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் தலைவர் 170 படம் எப்படி பட்ட படமாக இருக்கு என கேட்டார்கள்.  அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ” படம் கருத்துக்கள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நான் செல்கிறேன். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஜெய்பீம் எனும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படத்தை இயக்கிய  டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

40 minutes ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

56 minutes ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

2 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

2 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

2 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

2 hours ago