leo [File Image]
விஜய்யின் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தமிழக அரசு.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது.
இரு தினங்களுக்கு முன், வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, அக்டோபர் 20, 21, 22, 23, 24 ஆகிய தினங்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே 5 காட்சிக்கு அனுமதி என அறிவித்திருந்த நிலையில், அதனை தெளிவுபடுத்தும் வகையில் தற்போது புதிய அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leo Fourth Single: அக்டோபர் 16ம் தேதி சம்பவம் உறுதி.! ‘லியோ’வின் 4வது சிங்கிள் அப்டேட்…
முன்னதாக, முதல் நாள் சிறப்பு காட்சியாக 4 மணிக்கு திரையிட அனுமதி வழங்கிய நிலையில், தமிழக அரசு, தற்போது காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சி தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1:30க்குள் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 19 முதல் 24ம் தேதி வரை தலா 5 காட்சிகள் திரையிட வேண்டும், அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிகள் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறுவதை தவிர்க்க, சிறப்புக் குழு அமைக்க முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
Leo In LCU : லியோ ‘LCU’ தான்! உண்மையை உடைத்த ரோலக்ஸ் கேங்க்! கடும் அப்செட்டில் லோகேஷ்!
குறிப்பாக, கடந்த முறை வெளியான லியோ பற்றிய அரசு ஆணையில் ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில், இப்பொது விஜயின் பெயரே குறிப்பிடாமல் புதிய அரசாணை வெளியாகியுள்ளது கடந்த வாரம் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அரசாணை வெளியாகி இருப்பதால் விஜய் ரசிகர்கள் குழப்பத்திலும் சோகத்திலும் உள்ளனர்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…