rajini and lokesh kanagaraj [file image]
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்தின் வசூலை பார்த்து கோலிவுட் திரையுலகம் முதல் பாலிவுட் திரையுலகம் வரை அனைவரும் அதிர்ந்துள்ளனர். அந்த அளவிற்கு படம் வசூலில் பல சாதனைகளை படைத்தது ஒரு மாதங்களை கடந்தும் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை பார்த்த பிறகு விஜய் நடித்து வரும் லியோ படக்குழு மிகவும் பயந்துவிட்டதாம். ஏனென்றால், ஜெயிலர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள காரணத்தால் அந்த படத்தின் வசூலை முறியடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் லியோ படக்குழு காட்சிகளில் கிராபிக்ஸ் அமைக்கும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறதாம்.
ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பு கூட இப்படி அவர்கள் கடினமாக இறங்கி வேலைசெய்யவில்லையாம். அதுமட்டுமின்றி ஜெயிலர் படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டும் தான் தூங்குகிறாராம். அந்த அளவிற்கு தற்போது படத்தின் வேளைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ள காரணத்தால் லியோ படக்குழு மிகவும் பயத்துடன் இருப்பதாகவும், அதன் காரணமாக தற்போது லியோ படக்குழு அனைத்தும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மெனக்கட்டு வருவதாகவும் நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மீசை ராஜேந்திரன் லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தை தொடாது அப்படி ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படத்தின் வசூல் முறியடித்தால் என்னுடைய மீசையை எடுத்துக்கொள்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார். இவர் இப்படி தொடர்ச்சியாக லியோ படத்தை பற்றி பேசி வருவது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை கிளப்பியுள்ளது.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…