மாநாடு படத்தை ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று தருவதாக கூறி, பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக வெங்கட் பிரபு கூறிவிட்டாராம். மாநாடு ரிலீஸ் சமயம் இதுவும் ஒரு பிரச்சனையாக மாறியிருந்தது.
பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி சிம்புவின் கம்பேக் கமர்சியல் ஹிட் திரைப்படமாக மாநாடு வெளியாகியுள்ளது. அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் 25ஆம் தேதி ரிலீஸ் என கூறி, அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வந்த வேளையில் திடீரென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பட ரிலீஸ் தள்ளிவைத்து விட்டதாக அறிவித்தார்.
அதன் பின்னர் சிலர் உதவி செய்ததன் பின்னணியில் இந்த படம் சொன்ன தேதிதியில் ரிலீஸ் ஆனது. ஆனால் , முதல் நாள் 4 மணி 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதன் பின்னணியில் இயக்குனர் வெங்கட் பிரபு தான் இருந்தாராம். அதாவது, மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசி விற்று தருவதாக கூறினாராம். ஆனால், கடைசி நேரத்தில் அந்த நிறுவனம் கைவிட்டு விட்டதாக பின்வாங்கிவிட்டாராம்.
சாட்டிலைட் உரிமம் விற்கும் தொகை கொண்டுதான் பைனான்சியர்களுக்கு செட்டில் செய்யவேண்டி இருந்தது. ஆனால், சாட்டிலைட் உரிமம் விற்காத காரணத்தால் மனமுடைந்த சுரேஷ் காமாட்சி இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதன் பின்னர், உதயநிதிஸ்டாலின் மூலம் கலைஞர் டிவிக்கு சாட்டிலைட் உரிமம் சென்று அதன் பின்னர் சில காரணங்களால் அதுவும் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர், சிம்புவின் அப்பா டி.ஆர் தொலைக்காட்சி உரிமத்துக்கான பணத்தை தயாரிப்பாளரிடம் கொடுத்து அந்த உரிமத்தை வாங்கிவிட்டார். படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆனது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…