#MatthewPerry [File Image]
ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” -ல் நடித்ததன் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி காலமானார்.
டேவிட் கிரேன் மற்றும் மார்த்தா காஃப்மனால் ஆகியோர் உருவாக்கிய பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. 1994-ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் மேத்யூ பெர்ரி.
இவர் இந்த சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், 54 வயதாகும் மேத்யூ பெர்ரி நேற்று உயிரிழந்துவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தியாகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேத்யூ பெர்ரி வசித்து வந்தார்.
நேற்று (சனிக்கிழமை) தன்னுடைய வீட்டில் இருக்கும் குளியலறையில் அவருடைய உடல் இருந்ததாகவும் பிறகு அவருக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாராம். இவர் எப்படி மரணமடைந்தார் என்பதற்கான சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும் பல ரசிகர்களை கொண்டுள்ள மேத்யூ பெர்ரி திடீரென மரணமடைந்துள்ளதாக வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி சோகமடைந்துள்ளார்கள். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், மேத்யூ பெர்ரி சில்வர் ஸ்பூன்ஸ், ஹூ ‘ஸ் தி பாஸ்? உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…