MarkAntony OTT [File Image]
மார்க் ஆண்டனி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரிது வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி “. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகும் போதே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது என்றே கூறலாம். எதிர்பார்த்ததை விட படம் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.
ஓடிடியில் வருகிறது ‘மார்க் ஆண்டனி’
படத்தை திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்கள் பார்த்தாலும் அதில் பார்க்க முடியாத ரசிகர்களுக்காகவே படம் ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி, மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 13 ( வெள்ளிக்கிழமை) அன்று அமேசான் பிரேம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பட்ஜெட் & வசூல்
மார்க் ஆண்டனி திரைப்படம் 28 லிருந்து 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஆனால், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் படம் வெளியான 3 வாரங்களில் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. விஷால் சினிமா கேரியரில் அதிகம் வசூல் கொடுத்த திரைப்படமும் இது தான்.
படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரேம் வாங்கியுள்ள நிலையில், படம் 13-ஆம் தேதி வெளியாகிறது. அதைப்போல படத்தின் சாட்டிலைட் (தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை) யை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. விரைவில் நல்ல நாள் அன்று அதிலும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…