Categories: சினிமா

அதை செய்யும் போது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ! மிருணாள் தாகூர் வேதனை!

Published by
பால முருகன்

சீதா ராமம் திரைப்படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை  மிருணாள் தாகூர் . இவர் சீதா ராமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நானிக்கு ஜோடியாக ஹாய் நன்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதனையடுத்து, படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை மிருணாள் தாகூர்  சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஹாய் நன்னா திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் போலவே நானும் பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன். படத்தை பார்த்துவிட்டு நீங்கள் கொடுக்கும் வரவேற்பை எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நான் சீதா ராமம் படத்தில் நடித்ததை போலவே நல்ல கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். ரசிகர்கள் சீதா கதாபாத்திரத்தை காதலித்ததைப்போல இந்த படத்திலும் என்னுடைய கதாபாத்திரத்தை காதலிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள் அணைத்து பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும்.

மொத்த அழகும் அங்க தான் இருக்கு! சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடுவது சவாலாக இருந்தது. அது என்ன பாடல் என்றால் இந்த ‘அம்மாடி..’ பாடல் தான். ஒவ்வொரு வார்த்தையும் சரியாக உச்சரித்து நான் செய்கை காட்டவேண்டும் நான் அதை மிகவும் சவாலாகக் கண்டேன். படத்தில் நடிக்கும்போது மற்ற காட்சிகள் கூட அந்த அளவிற்கு எனக்கு சவாலாக இருந்து இல்லை ஆனால், அந்த பாடல் காட்சி எடுக்கும்போது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

என்னை பொறுத்தவரை சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களுக்கு  என்னுடைய பெயர் நினைவில் இருக்கிறதா அல்லது இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் சீதா.. போன்ற கதாபாத்திரங்களில் மூலம் அவர்களுடைய  நான் நினைவில் இருக்க வேண்டும். அதற்காக நேர்மையாக கடுமையாக உழைப்பேன்” எனவும் நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை மிருணாள் தாகூர் தெலுங்கில் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்திலும், இந்தியில் பல படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

6 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

6 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

8 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

8 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

11 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

12 hours ago