Yuvan Shankar Raja [file image]
யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம்.
எனவே, பாடல் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம் யூடியூபிலும் மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. பாடல் பிடிக்காத விஜய் ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவை ட்ரோல் செய்தனர். இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு முடங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் யுவன் சங்கர் ராஜா விசில் போடு பாடல் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதன் காரணமாக தான் தனது இன்ஸ்டா கணக்கை Deactivate செய்து விட்டதாக கூறி ட்ரோல் செய்து வருகிறார்கள்.
உண்மையில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா கணக்கை deactivate செய்துவிட்டாரா அல்லது வேறு யாரும் ஹக் செய்துவிட்டார்களா? என்பது பற்றி அவரே அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுத்தால் மட்டும் தான் தெரிய வரும். ஏனென்றால், எக்ஸ் வலைத்தளத்தில் யுவனின் அதிகாரப்பூர்வ கணக்கு அப்படியே தான் இருக்கிறது. இருந்தாலும், விசில் பாடல் வெளியான சமயத்தில் இப்படி நடந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…