Categories: சினிமா

சொல்ல வார்த்தைகள் இல்லை…உணர்ச்சிவசப்பட்ட சந்தோஷ் நாராயணனின் நெகிழ்ச்சி பதிவு.!

Published by
கெளதம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து கொண்டாடடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அவர்களை நேரில் சந்தித்தும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அந்த பாராட்டுகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளால் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் பாராட்டு

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை ரஜினிகாந்த் பாராட்டினார். இது குறித்து ரஜிகாந்த், இப்படம் ஒரு குறிஞ்சி மலர், படத்தில் மக்களை கைத்தட்டவும், பிரமிக்கவும், சிந்திக்கவும், அழவும் வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். லாரன்ஸின் நடிப்பு பிரமிப்பை தருகிறது.

இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

இந்நாளின் திரையுலக நடிகவேள் SJ சூர்யா என்றும் கேமராமேன், கலை இயக்குநர், தயாரிப்பாளரையும் பாராட்டிய ரஜினி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பற்றி விரிவாக வர்ணித்து தனது பாராட்டு குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதாவது, “சந்தோஷ் நாராயணன்வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்” என்றார்.

For my boy…லாரன்ஸ் இப்படியெல்லாம் நடிப்பாரா.? சூப்பர் ஸ்டாரை மிரள வைத்த அவரது சீடர் ‘சீசர்’.!

சந்தோஷ் நாராயணன் பதிவு

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இது குறித்து தனது பதிவில், எல்லோரும் வியந்து நோக்கும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டுப் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறு. எமது அருமைத் தலைவர், சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இன்று நாம் அப்பேற்றைப் பெற்று அகமகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து நிற்கிறோம்.

இப்பாராட்டு எம்மை மேன்மேலும் கடினமாக உழைக்கவும் இன்னும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் உந்துதலாகவும் உறுதுணையாகவும் நிற்கின்றது. சொல்லப் போதுமான வார்த்தைகள் இல்லை, எனினும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்கிறோம் “நன்றிகள் கோடி தலைவரே” என்று தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

10 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

11 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

11 hours ago