நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், பேனர் விழுந்து, விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில், யார் மீது கோபப்பட வேண்டுமோ, அவர்கள் மீது கோபப்படாமல், லாரி ட்ரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் தளபதி விஜய் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் ட்வீட்டரில் ஹேஸ்டேக் போட்டால் நன்றாக இருக்கும் என்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமலஹாசன், யாரை கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர் என்று நடிகர் விஜய் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…