பட வாய்ப்பே இல்லையா? முரட்டு ரீ -என்ட்ரி கொடுக்க ரெடியான நயன்தாரா!

Published by
பால முருகன்

சென்னை : கம்பேக் கொடுக்க நடிகை நயன்தாரா பெரிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிட் படம் கொடுத்து ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். தமிழில், அவர் கடைசியாக நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருவதால் அவருக்கு அடுத்ததாக பழையபடி பட வாய்ப்புகள் வராமல் இருக்கிறது. பழையபடி அவர் பெரிய படங்களில் நடிக்கவேண்டும் என்று அவருடைய கம்பேக்-காகதான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள்.

அப்படி காத்து இருக்கும் ரசிகர்களுக்காகவே, ஒரு சூப்பரான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகை நயன்தாரா அடுத்ததாக அஜித்திற்கு ஜோடியாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். பட வாய்ப்புகளே இல்லை என சோகத்தில் இருந்த நயன்தாராவுக்கு இந்த படத்தில் வாய்ப்பு வந்தவுடன் மகிழ்ச்சி அடைந்துவிட்டாராம்.

படத்தின் கதை எல்லாம் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது நான் படத்தில் நடிக்கிறேன் என்று கூறினாராம். கிட்டத்தட்ட 2 நாட்கள் படத்தில் நடித்துவிட்டும் சென்று இருக்கிறாராம். இந்த படத்தில் நடிக்க தனக்கு 10 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்து அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டது.

குட் பேட் அக்லி படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த ‘குட் பேட் அக்லி ‘ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்குகிறார். படத்தை புஷ்பா படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக…

49 minutes ago

பஞ்சாப் – மும்பை இடையே இன்று முக்கிய போட்டி.. வென்றால் முதலிடம்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,…

1 hour ago

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.!

டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…

2 hours ago

கொட்டும் தீர்க்கும் கனமழை… நீலகிரி – கோவை மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்.!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி)…

2 hours ago

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

16 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

16 hours ago