சினிமா

சம்பளமே கொடுக்கவில்லை? ‘லியோ’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், நா ரெடிதான் வரவா “ பாடலில் நடனமாடிய கலைஞர்களுக்கு ஊதியம் தரவில்லை என சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

லியோ படத்தில் இடம்பெற்றிருந்த அந்த ‘நா ரெடிதான் வரவா’  பாடலில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் நடனம் ஆடி இருந்தார்கள். அவர்களிலில் சிலருக்கு சம்பளமே கொடுக்கப்படவில்லையாம். படத்தில் நடனம் ஆடியதற்காக 3 மாதங்களாகியும் இன்னும் சம்பளமே கொடுக்கவில்லையாம். ஒரு நாளைக்கு ரூ.4,000 சம்பளம் தருவதாக பேசப்பட்டு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாம்.

பாடல் காட்சிகள் மட்டும் 6 நாட்கள் எடுக்கப்பட்ட நிலையில். பேசியபடி பார்த்தால் தலா 24,000  கொடுக்கப்படவேண்டுமாம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் 3ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார்களாம்.  எனவே, இதன் காரணமாக அந்த நடனமாடிய 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

புகார் கொடுத்தது மட்டுமின்றி 7 ஸ்க்ரீன் நிறுவனத்திற்கு நேரடியாகவே சென்று சம்பளம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கிறது. இதற்கு 7 ஸ்க்ரீன் நிறுவனம் சங்க உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு விளக்கம் கொடுத்துள்ள 7 ஸ்க்ரீன் நிறுவனம்’ தங்களுக்கு 1,300 நடன கலைஞர்கள் மொத்தமாக தேவைப்பட்டார்கள் எனவும்,  தாங்கள் நேரடியாக அவர்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள முடியாது என்ற காரணத்தால்  சம்பந்த பட்ட சங்கத்திடம் தெரிவித்துவிட்டு அவர்கள் எங்களுக்கு ஏற்பாடுகளை செய்து தருவார்கள். எனவே அவர்கள் தான் பாடலில் நடனம் ஆட உறுப்பினர்களை படப்பிடிப்புக்கு அனுப்பி வைப்பார்கள்.

அதாவது சுமார் 400 பேரை அவர்கள் அனுப்பி வைத்தார்கள். மீதம் இருப்பவர்கள் அந்த சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள். அந்த சங்கத்தின் சார்பாக தங்களுக்கு மெயில் அனுப்பப்பட்டதாகவும் அதில் கொடுக்கப்பட்ட சம்பள விவரங்களை பார்த்து தான் நாங்கள் ஒற்றுக்கொண்டோம்.  எனவே, அவர்கள் யாருக்கெல்லாம் எவ்வளவு கொடுக்கவேண்டுமோ அதற்கான வங்கிக்கணக்குள் மற்றும் சம்பளம் கொடுத்த எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது என விளக்கம் கொடுத்துள்ளது.  படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த மாதிரி சர்ச்சைகள் வருவது படக்குழுவை கடுப்பாக்கியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

37 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

3 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago