ramya krishnan speech [Image source : file image ]
சென்னை மயிலாப்பூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் தெரு விளக்குகளுக்கு தண்ணீர் வைக்க கிண்ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரம்யா கிருஷ்ணன் மற்றும் வரலட்சுமி இருவரும் கோடை காலத்தில் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். முதலில் பேசிய ரம்யா கிருஷ்ணன் “வீட்டிற்கு வெளியே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்கள் இது மிகவும் சின்ன விஷயம்தான்.
நமக்கு தாகம் எடுத்தால் ஓரிடத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கலாம். ஆனால் விலங்குகளுக்கு அப்படி இல்லை. தண்ணீர் என அப்படி கேட்கவும் முடியாது. எனவே வீட்டிற்கு வெளியே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்தால் ஒரு விலங்கின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும் தயவு செய்து தண்ணீர் வைங்கள்” என்று கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து பேசிய வரலட்சுமி ” தயவு செய்து வீட்டிற்கு வெளியே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைங்கள். நாங்களே 2,500 கிண்ணங்களை கொடுக்கிறோம். அதை வாங்கிக்கொண்டு தண்ணீர் மட்டும் வையுங்கள். இதன் மூலம் எதனை விலங்குகள் பறவைகள் தண்ணீர் குடிக்கும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்” என கூறியுள்ளார். வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், விலங்குகளுக்கு தண்ணீர் வைக்க இருவரும் அறிவுறுத்தியுள்ளதால் பலரும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை பாராட்டி வருகிறார்கள்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…