ARRahman [Image Source : Twitter/@Sun News]
மகாராஷ்டிரா: புனே நகரின் கச்சேரி மேடையில், பாட்டு பாடிக்கொண்டிருந்த ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை பாடவிடாமல் புனே காவல்துறை தடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புனேவில் நேற்றிரவு லைட்மேன்களுக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை அவர் நடத்தினார். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல், அதாவது 10 மணியைத் தாண்டி நிகழ்வு தொடர்ந்ததையடுத்து, மேடையிலேறிய புனே காவல்துறை அவரை பாடவிடாமல் தடுத்தனர். பாடலை பாதியில் நிறுத்திய அவர் வெளியேறும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
புனேவில் உள்ள ராஜா பகதூர் மில்ஸில் நேற்றிரவு நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் இந்த நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் குவிந்தனர். மேலும், இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…