Categories: சினிமா

வனிதாவை தாக்கிய மர்ம நபர்…பிரதீப் ஆண்டனி வருத்தம்.! வைரலாகும் உரையாடல்..

Published by
கெளதம்

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான வனிதாவை கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தன்னை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகவும், காயமடைந்த கண்னுக்கு அருகே வீங்கிய முகத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனிக்கு எதிராக தனது மகள் ஜோவிகாவும் மற்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக அவர் கூறினார். மேலும், மர்ம நபர் தாக்குதல் குறித்து வனிதா காரும் அளித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், சனிக்கிழமை இரவு பிக்பாஸ் 7 ஷோவை முடித்துவிட்டு, உணவை சாப்பிட்டுவிட்டு, என் சகோதரி சௌமியாஸ் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த எனது காரில் இறங்கினேன். எங்கிருந்தோ வந்த மர்மநபர் ஒருவர், ரெட் கார்ட் ஆ  கொடுக்கிங்க…என்று சொல்லிவிட்டு தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், பிக் பாஸ் தமிழ் 7-ல் இருந்து சக பெண் போட்டியாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி.  இதனை தொடர்ந்து, பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதெற்கு ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  அது மட்டும் இல்லாமல், அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர்.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதற்கு முன்பு அவருடைய தரப்பு நியாத்தை கமல் கேட்காததால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், வனிதா மகள் ஜோவிகா வீட்க்குள் இருப்பதால்,  நிகழ்ச்சி பார்த்து விட்டு ரிவ்யூ கொடுத்து வருகிறார். அந்த வகையில், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்பது போல் விமர்சித்திருந்தார்.

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? குட்டி பத்மினியோடு இருக்கும் அந்த நடிகை…

இதனையடுத்து, வினிதா தாக்கப்பட்டதை அறிந்து பிரதீப் ஆண்டனி, வருத்தம் தெரிவித்து நம்வம்பர் 5 ஆம் தேதி நடந்த வாட்ஸ் அப் உரையாடலை பகிர்ந்து இருந்தார். பின்னர், அந்த பதிவை டெலிட்டு செய்துவிட்டார்.

தனது பதிவில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அல்லது யாருக்கும் எதிராக நான் இல்லை. நான் அவர்களுடன் இப்படித்தான் பேசுகிறேன். வினிதா உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் உங்களுக்காக வருந்துகிறேன். ஓய்வு எடுங்கள். ஜோவிகா புத்திசாலி, அவளால் அதை வெல்ல முடியும், அவளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

Pradeep Antony reacts [File Image]

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

11 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

13 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago