தலயின் வலிமை படத்தினை குறித்த புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரின் ரீ என்ட்ரி குறித்தும் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எனவே ரசிகர்கள் பலர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படம் ஏப்ரல் மாதத்தில் முதலில் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக தீபாவளிக்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் வலிமை பட பணிகளை கொரோனா பிரச்சினை அனைத்தும் முடிவுக்கு வந்த பின்னர் தொடங்கலாம் என்று அஜித் கூறியதாக அண்மையில் தெரிய வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,அஜித்தின் 60வது படமான வலிமை படம் ஒரு மிகப் பெரிய ஆக்ஷன் படம் என்றும், இதன் 50 சதவீதம் படப்பிடிப்புகள் முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை போன்று தெலுங்கிலும் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகயிருக்கிறது. இன்னும் 10-15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள இந்த படத்தின் மூலம் இரண்டு வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பவன் கல்யாண்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…