Categories: சினிமா

புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் அதிரடி கைது…காரணம் என்ன தெரியுமா.?

Published by
கெளதம்

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிக்பெரிய ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த நடிகர் ஜெகதீஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை நடிகை ஒருவர், தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து நடிகர் ஜெகதீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த நடிகை கடந்த மாதம் 29ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெகதீசனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்

தற்போது, புஷ்பா பட துணை நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, புஞ்சகுட்டா காவல்துறை விசாரணையில், உயிரிழந்த  பெண்ணை ஜெகதீஷ் ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.

அந்த புகைப்படத்தை வைத்து ஜெகதீஷ் அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும், மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அந்த பெண் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவந்துள்ளது. மேலும், இந்த வழக்கு பற்றிய கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கின்றது.

மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!

நடிகர் ஜெகதீஷ் கடைசியாக மைத்ரி மூவி மேக்கர்ஸின் சிறிய பட்ஜெட் நாடகமான சத்திகானி ரெண்டு யேகராலுவில் நடித்தார். அவர் அடுத்ததாக நிதின் மற்றும் ஸ்ரீலீலாவின் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் கிராமிய நாடகமான அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்டில் நடித்துள்ளார்.

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

7 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

7 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

10 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

11 hours ago