Categories: சினிமா

அந்த காட்சியில் நடிக்கும் போது கண் கலங்கி அழுதேன் – ராஷ்மிகா மந்தனா வேதனை!

Published by
பால முருகன்

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த எல்லாருடைய கதாபாத்திரமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் அனிமல் படம் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்த நிலையில், அனிமல் திரைப்படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அனிமல் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மக்களுக்கு முதலில் நான் நன்றியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் நான் அழுதுவிட்டேன்.

லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது – விஷால் குற்றச்சாட்டு!

படத்தில் ஒரு காட்சியில் நான் ரன்பீர் கபூரை கன்னத்தில் அறைவது போல ஒரு காட்சி வரும் அந்த கட்சியில் நான் நடிக்கவே முதலில் தயங்கினேன். பிறகு இயக்குனர் என்னிடம் ஒரு மனைவி அந்த சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்வாளோ அதேபோலவே நடிக்கவேண்டும் என்று கூறினார். பின் படத்தினுடைய தாக்கத்தை புரிந்துகொண்டு அந்த காட்சியில் நடித்தேன்.

பிறகு அந்த காட்சியில் ஒரே டேக்கில் எடுத்துமுடித்தோம். காட்சி முடிந்ததும் என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ரன்பீர் கபூரை அறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை காட்சியில் நடித்து முடித்த பிறகு ரன்பீர் கபீரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நன்றாக இருக்கீறீர்களா என்று கேட்டேன்” எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

24 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago