சினிமா

ரொம்ப அச்சுறுத்தலா மாறிடும்! ராஷ்மிகாவுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து பயந்த மஞ்சிமா மோகன்!

Published by
பால முருகன்

நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கழுத்திற்கு கீழே கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு சென்றது போல வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை அது AI தொழில் நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரிய வந்தது. ஆனால், அச்சு அசலாக அந்த வீடியோவில் இருக்கும் முகம் ராஷ்மிகாவை போல இருந்தது.

இதன் காரணமாகவே இப்படியா உடை அணிந்து செல்வது என ராஷ்மிகாவுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். பிறகு, நடிகர் அமிதாப் பச்சன் இது முற்றிலும் எடிட் செய்யப்பட்ட வீடியோ இதனை பதிவு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பிறகு ராஷ்மிகாவும் இதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், ஒரு நடிகையின் முகத்தை இப்படி வைத்து மார்பிங் செய்து வீடியோ வெளியிட்டது குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து  வருகிறார்கள். குறிப்பாக நாகசைதன்யா, சின்னமையி,  கே.கவிதா உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை மஞ்சிமா மோகன் “ராஷ்மிகாவுக்கு நடந்த இந்த சம்பவம் மிகவும் பயமாக இருக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் இது எதிர்காலத்தில் பெரிய அச்சறுத்தலை ஏற்படுத்தும்” என கூறிள்ளார்.

மேலும்,தனது மார்பீங் வீடியோ குறித்து விளக்கம் கொடுத்த ராஷ்மிகா ” ஆன்லைனில் பரப்பப்படும் அந்த மார்பீங் வீடியோவைப் பற்றி பேசும்போதே ரொம்ப வேதனையாக இருக்கிறது. நான் ஒரு நடிகையாக இருந்ததால் என்னால் இந்த பிரச்சனையை இப்போது சமாளித்து விட முடிகிறது. இதுவே நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது இப்படியானால் நடந்திருந்தால் என்னால் எப்படி சமாளித்து இருக்க முடியும் இரு கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி முகம் மற்றும் தொழில் நுட்பத்தால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன்பு இதனை பற்றி மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

10 minutes ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

31 minutes ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

52 minutes ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

10 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

10 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

12 hours ago