Manikandan new movie [file image]
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடைசியாக மத்தகம் வெப் சீரிஸில் நடித்திருக்கும் மணிகண்டன், முன்னதாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு காதல் குடும்ப திரைப்படமாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஜெய் பீம் வெற்றியை தொடர்ந்து குட் நைட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மணிகண்டனுக்கு இப்படம் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் கல்லுரியில் நடைபெறும் காதல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சத்தமில்லாமல் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
இது குறித்து அறிவிக்கும் வகையில், படக்குழு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. இயக்குனராக அறிமுகவிருக்கும் வியாஸ் இதற்கு முன்பு கண்ணா ரவி மற்றும் அம்ருதா ஸ்ரீனிவாஸ் முக்கிய வேடங்களில் நடித்த பிரபலமான யூடியூப் தொடரான லிவின் என்ற தொடரை இயக்கியுள்ளார்.
மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி, அம்ருதா ஸ்ரீனிவாஸ் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டனின் இசையமைப்பிலும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது.
ஜோ படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதனையடுத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற இருக்கிறது. விரைவில், இப்படத்திற்கான தலைப்பு மற்றும் டீசர், பாடல்கள் என அனைத்தும் அடுத்தடுத்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…