சினிமா

தலைவர் 170 படப்பிடிப்பின் போது காயம்! வேதனையில் நடிகை ரித்திகா சிங்!

Published by
பால முருகன்

நடிகை ரித்திகா சிங் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு இருந்தே ஒரு பாக்ஸர் தான். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங் தற்போது ரஜினிகாந்துடன் அவருடைய 170-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான டி.ஜே.ஞானவேல் தான் ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்காக ரித்திகா சிங் கடுமையான உடற்பயிற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டவாறு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த மாதிரி கெட்டப் மட்டும் போடவே மாட்டேன்! நடிகை சரண்யா அதிரடி!

தலைவர் 170 படத்திற்கான படப்பிடிப்பின் போது சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த சமயம் தான் நடிகை ரித்திகா சிங்கிற்கு கண்ணாடிகள் உடைந்து தன்னுடைய கைகள் கீறப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ” சில சமயம் எது நடக்குமோ அது தான் நடக்கும், பரவாயில்லை நான் கைப்பிடியை விட்டதால் எனக்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த காயம் காரணமாக என்னால் படப்பிடிப்பில் இப்போது கலந்துகொள்ளமுடியாது. ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் விரைவில் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்” என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கவனமாக இருங்கள் என எச்சரித்து வருகிறார்கள். தலைவர் 170 படத்திற்காக இப்படி கடினமான காட்சிகளில் ரித்திகா சிங் நடித்து வருவதால் கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேச கூடிய வகையில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

14 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

15 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

16 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

17 hours ago