santhanam [File Image]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். இவர் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்ப கலாட்டத்தில் எல்லாம் 1 லட்சத்திற்கு மேல் வாங்கி வந்தாராம். அதற்கு பிறகு காமெடி நடிகராக வளம் வந்தவுடன் தனது சம்பளத்தை லட்ச கணக்கில் உயர்த்தி லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தாராம்.
பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் அவருடைய படங்களும் நல்ல வசூலை குவித்த காரணத்திற்காகவே ஹீரோவாக நடிக்க 1 கோடி சம்பளம் வாங்கினாராம். இப்போதெல்லாம் நடிகர்கள் தங்களுடைய படங்கள் ஹிட் ஆகிறதோ இல்லயோ தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி வருகிறார்கள். எனவே, நடிகர் சந்தனமும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
தளபதி 68 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்! என்ன தெரியுமா?
அதன்படி, சந்தானம் தன்னுடைய சம்பளத்தை தற்போது 3 கோடிக்கு உயர்த்தி இருக்கிறாராம். தற்போது அவர் பில்டப் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காகவே நடிகர் சந்தானம் சம்பளமாக 3 கோடி வாங்கி இருக்கிறாராம். இந்த தகவலை படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரிக்கும் தயாரிப்பாள ஞானவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஞானவேல் ‘ இந்த படத்தில் நடிப்பதற்காக சந்தானத்திற்கு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நான் அவர் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களை தயாரித்த போது லட்ச கணக்கில் சம்பளம் கொடுத்து இருக்கிறேன். இப்போது அவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறேன் அவர் 30 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர வேண்டும்” எனவும் ஞானவேல் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சந்தானம் கடைசியாக கிக் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ’80ஸ்பில்டப்’ படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…