மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாம்.
மாநாடு திரைப்படம் சாட்டிலைட் உரிமம் விற்கப்படாமல் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அதன் ரிலீஸ் தேதியே மாற்றியமைக்கும் சூழல் உருவானது. அப்போது தக்க நேரத்தில் தன்னுடைய மகனுக்காக மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கான தொகையை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் டி.ஆர்.
தற்போது மாநாடு திரைப்படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், தற்போது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கு பலத்த போட்டி இருந்தது.
தற்போது, அந்த போட்டியில், விஜய் டிவி வென்றுள்ளது. ஆம், விஜய் டிவி மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கியுள்ளதாம். படத்தின் கரு டைம் லூப் என கூறப்படுகிறது. அதாவது நடந்த சம்பவம் திரும்ப திரும்ப நடக்கும் கதைக்களம். அதனை ஒப்பிட்டு, ரசிகர்கள் இணையத்தில் இனி தான் டைம் லூப் ஆரம்பமாகிறது என கூறி வருகின்றனர். விஜய் டிவி ஒரு படத்தை வாங்கிவிட்டால் அதனை திரும்ப திரும்ப ஒளிபரப்புவார்கள்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…